ஏற்றுமதி விவசாய பயிர்களின் புதிய நடுகை /மீள் நடுகை செய்வதற்கான முதலீட்டு உதவியைப் பெறுதல்
யாருக்கு விண்ணப்பிக்க முடியும் : கறுவா, மிளகு, கோப்பி, கொக்கோ, ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், வெணிலா, லெமன்கிராஸ் மற்றும் சிட்ரோனெல்லா போன்றவற்றை பயர்ச் செய்ய விரும்புகின்ற விவசாயிகள் அல்லது எந்தவொரு நபருக்கும்.
ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற உதிவிகள்
- சாதிக்காய், கிராம்பு, ஏலக்காய், கறுவா, மிளகு, கோப்பி மற்றும் சிட்ரோனெல்லா கொக்கோ என்பவவற்றின் சான்றளிக்கப்பட்ட நடுகைப் பொருட்கள் தேவையான அளவு இலவசமாக வழங்கப்படும்.
- பயிர்ச் செய்கை மற்றும் பயிர் முகாமை என்பவற்றிற்காக தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் பயிற்சி வழங்கப்படும்.
நடுகைப் பொருட்களுக்காக திணைக்களத்தினதும் பங்களிப்பு
பயிர் | தேவையான கன்று/ஹெ | மொத்த கன்றுகளின் பெறுமதி (ரூபா.) |
கறுவா | 9000 | 162,000.00 |
மிளகு | 1700 | 51,000.00 |
கோப்பி (அராபிகா) | 3000 | 54,000.00 |
கோப்பி (ருபஸ்ட்டா) | 1600 | 28,800.00 |
சிட்ரனெல்லா | 28000 | 84,000.00 |
சாதிக்காய் | 250 | 25,000.00 |
கிராம்பு | 250 | 17,500.00 |
ஏலம் | 2000 | 30,000.00 |
கொக்கோ | 1100 | 19,800.00 |
தகுதி வரம்பு:
- குறைந்தபட்சம் தகுதி வாய்ந்த நிலப்பரப்பு – 0.1 ஹெக்டேர் (1/4 ஏக்கர்.)
- நிலத்தின் உரிமையை நிரூபிக்க நிலத்தின் உறுதிப் பத்திரத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
- உரிய பயிர்களுக்கு தேவையான ஏற்ற நிலம், மண், உயரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலை என்பன இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப நடைமுறை:
- விண்ணப்பத்தை விரிவாக்கல் உத்தியோகத்தரிடம் (அருகிலுள்ள விவசாய சேவை நிலையத்தில் புதன் கிழமைகளில் காலை 8.30 – மாலை 4.15 மணி வரை) அல்லது மாவட்ட பிரதி / உதவி பணிப்பாளர் (அபிவிருத்தி) என்பவரிடம் எந்த ஒரு அலுவலக நாளிலும் காலை 8.30 – மாலை 4.15 மணி வரை சமர்ப்பிக்க முடியும்.
- விண்ணப்பங்களை இங்கிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சேவைகளைப் பெறுவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் பயிற்சி: இலவசமாக
நடுகைப் பொருட்கள்:
- சாதிக்காய், கிராம்பு, ஏலக்காய், கொக்கோ, கறுவா, மிளகு, கோப்பி மற்றும் சிட்ரனெல்லா செடிகள் 5 ஏக்கர் வரை: – இலவசமாக
சேவையை எவ்வாறு வழங்குவது:
அப்பகுதியின் விரிவாக்கல் அலுவலர் விண்ணப்பதாரரின் நிலத்தை தனிப்பட்ட முறையில் பரிசோதிப்பார், மேலும் தகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டால் அந்தத் திட்டத்தில் நிலம் பதிவு செய்யப்படும். அடிப்படை நில தயாரிப்பு நடவடிக்கைகள் மற்றும் உரிய பயிர் செய்கை குறித்தும் விரிவாக்கல் உத்தியோகத்தர் தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்குவார்.
நிலம் தயாரித்ததன் பின்னர் திணைக்களத்தினால் அல்லது பதிவு செய்யப்பட்ட நாற்று மேடைகளில் இருந்து சான்றளிக்கப்பட்ட நடுகைப் பொருட்கள் வழங்கப்படும். நடுகை மேற்கொண்டு 3, 12, 18, 24 மாதங்களின் பின்னர் நிலத்திற்கு வருகை தரும் விவசாயிகளுக்கு விரிவாக்கல் உத்தயோகத்தர்கள் பிரிவுகளில் ஆலோசனைகள் வழங்கப்படும்.
சேவையை வழங்க எடுக்கப்பட்டுகின்ற நேரம்:
விண்ணப்பங்கள் கிடைத்த பின்னர் 2 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரை
பொறுப்பான உத்தியோகத்தர்கள்:
பிரதேசத்தின் விரிவாக்கல் உத்தியோகத்தர் (அருகிலுள்ள கமநல சேவை நிலையத்தை அடிப்படையாகக் கொண்டு) மாவட்டத்திற்கு உரிய ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பிரதி/உதவி பணிப்பாளர்.